கிராமத்துக்குயிலோசை !!
கோணல் வகிடு எடுத்து
கூந்தலிலே மல்லி வச்சு
மூணு கல்லு வச்ச
மூக்குத்திதான் அணிஞ்சு
கண்டாங்கிச் சேலைகட்டி
கருத்த உடம்புக்காரி
முடிஞ்சுக்கிட்டுப் போனாலோ
முந்தானையில் உம்மனச !
மனசப் பறிகொடுத்து
மயங்கித்தான் போன மச்சான்
மார்கழிதான் முடியட்டுமே
மானை நீங்க கரம்பிடிக்க !!
காணி நிலமும் வேண்டாம்
காஞ்சிப் பட்டும் வேணாம்
ஓலைக் குடிசை போதும்
தாலிக்கு மஞ்சள் போதும் !!
எங்கப்பன் சம்மதிச்ச
எல்லைச்சாமி கோயிலில
கல்யாணம் கட்டிக்கிறேன்
காலமெலாம் உன் கூடவறேன் !!!
No comments:
Post a Comment