Sunday 6 March 2011

Haikoo.....

ஹைக்கூ ......!!!


தமிழ் இலக்கியத் தோப்பின் 
                   இளைய குயில் !!


கதை....விதை...கவிதை...


அவள் கதைத்தால்
        அவன் விதைத்தான் 
                   உருவானது புதிய கவிதை  

                               .........................  குழந்தை !

கண்தானம் 

மண்ணுக்குள் செல்லும் கண்ணுக்கு
          ஒரு மறுவாழ்வு !

முத்தான முத்து !

என்னவள் வீட்டின் முன் 
இத்தனை முத்துக்களா ?

ஓ ! அவள் மழைத் துளியை கையால் தட்டி 
                   விளையாடிக்கொண்டிருக்கிறாள்  ! 

படிப்பினை 

பங்கித்தின்றால்
பசியாறும் 
கற்றுக்கொண்டன 
காக்கைகள் மட்டுமே !

மலர்  

கருவண்டையும்  
கவிதை பாட வைத்த 
கட்டழகி !!

தென்றலே !

வண்ணமலரோடும்
வாழை இழையோடும் 
தென்னங் கீற்றோடும் 
தேமாங் கனியோடும்
சத்தமின்றி - நீ 
சல்லாபித்தது போதாதா ?

என்னவளின் 
இடை மறைக்கும் 
உடை வருட  என்ன துணிச்சல் உனக்கு ?

சாக்பீஸ் 

கரும் பலகையோடு- ஓடி ஓடி 
காதல் மொழி பேசினாய் 
அந்தோ !
உருவம் தேய்ந்தபின் 
உதாசீனப் படுத்தப் பட்டாய்  !!

அமாவாசை 

நிலவுக்கு விடுமுறை நாள் !
இருளுக்கு விடுதலை நாள் !!

அவள் - அவன் 

அவள் 
             காரியத்தில்
             கண்ணாயிருக்கிறாள் !
அவன் 
            காரியத்தில் 
            கண்ணனை இருப்பதால் !

முரண்பாடு 

மரங்களைக்காக்க எழுதிய 
மணிக் கவிதைகளை  
அச்சேற்ற வேட்டுப்பட்டன 
ஆயிரம் மரங்கள் !!

கோபம் 

மனச் சலனத்தை காட்டிடும் கண்ணாடி ...
மனித நேயத்தை உடைப்பதில் முன்னோடி ...
அன்பினை முறிக்கும் தன்னாலே ...
அடைந்தவர் கெடுவர் பின்னாலே ...!!

ஒற்றுமை

மேகமும் அவளும்  ஒரு ஜாதி !
    கருமை நிறத்திலா ?
    கர்ணன் குணத்திலா ?
     அல்ல ..அல்ல ...
                               கண்ணீர் விடுவதில் !.... 

யதார்த்தம்

தடி எடுத்தவன் எல்லாம் 
தண்டக்காரன் என்றால்
இங்கு ..
குரங்குகள் கூட 
கோலோச்ச வந்துவிடும் !!

இன்றைய மானிடன்:

கணிப்பொறிக் காலத்திலும் 
மகாபாரதக் 
கதாப் பாத்திரங்கள் !!

மார்ச்சுவரி (பிண அறை )

நேற்றுவரை ..
       ஏழ்மைக் காற்றைச் சுவாசித்தவன் 
இன்று 
       ஏ.சிக் காற்றில் வசிக்கிறான் !!

புதுக்கவிதை !

தளை இல்லை .... கலையானவன் !
சீர் கேட்காத சிறப்பானவன் !
பொருளை மட்டும் பொதுவாக்கி 
எல்லோர்க்கும் புரியச் செய்வான் !
உணர்ச்சியை மட்டும் உயிர் மூச்சாய்க் கொண்டவன் !  

மழலை 

நிகழ் காலம் அறியா  
            வருங்கால மேதை !

மாடர்ன் ஆர்ட்

புதுமைதான் 
பொருள் புரியும்வரை ...
               ........ மங்கையின் மனம் !

காண்டக்ட் லென்ஸ் 

கண் பார்வை சுருங்கியது
         கண்ணாடிக்குள் ஒளிந்திருந்தேன் !
தேங்க்ஸ் டு சைன்ஸ் 
கண்ணாடியைச் சுருக்கி 
          கண்களுக்குள் ஒளித்து வைத்தேன் ....





No comments:

Post a Comment