Sunday 6 March 2011

Ninaivugal

                                 நினைவுகள் !!

பின்னோக்கிப் பார்க்கின்றேன் 
      பெரியதொரு பாதை - அதில் 
தன்நோக்கில் பயணிக்க
      நினைக்குமிந்தப் பேதை !
மண்ணான ஆசைகளை 
     மனம் நினைத்துப் பார்க்கும் 
பொன்னான நினைவுகளில் 
     புதிய சக்தி பிறக்கும் !
எந்நாளும் இறவாத 
    புகழ் பெறவே வேணும் 
கண்ணான இறைவா உன் 
    கருணை தானே வேணும் !!  

No comments:

Post a Comment