நினைவுகள் !!
பின்னோக்கிப் பார்க்கின்றேன்
பெரியதொரு பாதை - அதில்
தன்நோக்கில் பயணிக்க
நினைக்குமிந்தப் பேதை !
மண்ணான ஆசைகளை
மனம் நினைத்துப் பார்க்கும்
பொன்னான நினைவுகளில்
புதிய சக்தி பிறக்கும் !
எந்நாளும் இறவாத
புகழ் பெறவே வேணும்
கண்ணான இறைவா உன்
கருணை தானே வேணும் !!
No comments:
Post a Comment