சொல்லத்தான் வேண்டுமா?
சொற்களில் அடங்காத
மெல்லிய உணர்வு இதை
மெல்லத்தான் உணர்ந்திடனும்
அழகான உன் விழிகள்
அழுத போதா?... அதை
அருகிருந்து என் விரல்கள்
துடைத்த போதா?
வண்ண வண்ண கோலம் - நீ
வரைந்த போதா?
வாயார நான் அதனைப்
புகழ்ந்த போதா?
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
இனிய தோழி !
எப்போது நம் நட்பு
பூத்ததென்று.......!!!