அதிகாலைக் கனவினிலே
அவன் வந்தான்
முன்தினம் நடந்ததற்கு
முழுப்பொறுப்பு நான் என்றான்
காதலுடன் கரம் பற்றினான்
கண்ணீர் துடைத்தான்
மண்டியிட்டான் என்முன்
மயக்கும் விழியால் நோக்கினான்
மன்னிப்புக் கேட்டான் என்
மடியினில் தலை சாய்த்தான்
மறந்துவிடு எல்லாம் - இனி
மனம் மாறமாட்டேன் என்றான்
அவன் மதுரக் குரலில்
மனம் மாறினேன்
அருகில் சென்று ஆசையோடு
ஆரத்தழுவ எத்தனித்தேன்....
என் அருமை கனவை வெறுமையாக்கி ...
ஒலித்து ஒலித்து எனை விழிக்கச்செய்தது
............... குறுஞ்செய்தி.. !!!
கனவிற்குமா காலன்
அவன் வந்தான்
முன்தினம் நடந்ததற்கு
முழுப்பொறுப்பு நான் என்றான்
காதலுடன் கரம் பற்றினான்
கண்ணீர் துடைத்தான்
மண்டியிட்டான் என்முன்
மயக்கும் விழியால் நோக்கினான்
மன்னிப்புக் கேட்டான் என்
மடியினில் தலை சாய்த்தான்
மறந்துவிடு எல்லாம் - இனி
மனம் மாறமாட்டேன் என்றான்
அவன் மதுரக் குரலில்
மனம் மாறினேன்
அருகில் சென்று ஆசையோடு
ஆரத்தழுவ எத்தனித்தேன்....
என் அருமை கனவை வெறுமையாக்கி ...
ஒலித்து ஒலித்து எனை விழிக்கச்செய்தது
............... குறுஞ்செய்தி.. !!!
கனவிற்குமா காலன்
No comments:
Post a Comment