Tuesday 15 February 2011

KANAVU

அதிகாலைக் கனவினிலே
  அவன் வந்தான்
முன்தினம் நடந்ததற்கு
 முழுப்பொறுப்பு நான் என்றான்
காதலுடன் கரம் பற்றினான்
  கண்ணீர் துடைத்தான்
மண்டியிட்டான் என்முன்
  மயக்கும் விழியால் நோக்கினான்
மன்னிப்புக் கேட்டான் என்
  மடியினில் தலை சாய்த்தான்
மறந்துவிடு எல்லாம் - இனி
  மனம் மாறமாட்டேன் என்றான்
அவன் மதுரக் குரலில்
  மனம் மாறினேன்
அருகில் சென்று ஆசையோடு
  ஆரத்தழுவ எத்தனித்தேன்....
என் அருமை கனவை வெறுமையாக்கி ...
  ஒலித்து ஒலித்து எனை விழிக்கச்செய்தது
 ...............  குறுஞ்செய்தி.. !!!
கனவிற்குமா காலன்













No comments:

Post a Comment