சவுக்கடி ....
நீரில் கரையாத
நெருப்பில் கருகாத
தங்கமே ....!
வேண்டாம் தலைக்கனம்
இதோ....
உன்னையும் உருக்கிட
உருவைக் குலைத்திட
தயார்....
"ராஜத்ராவகம் "
தலையின் கனத்தால்
தானே அழிகிறது
"தீக்குச்சி"
வாயின் கொழுப்பால்
வலிய வினை தேடுகிறது
"தவளை"
புதைந்து போனதை எண்ணி
புலம்பாமல்
பொறுமையோடு காத்திருந்ததால்
கரிகூட ஜொலிக்கிறது
"வைரமாய்"
எனவே ...
புரிந்துகொள் மானிடா ...!
உன்னுள் புதைந்து இருக்கும்
ஆற்றலை
பொறுமையோடு வெளிக்கொணர்
ஆபத்துதான்...
கணம் எங்கிருந்தாலும்....
No comments:
Post a Comment