சுகம்.....
மார்கழியின் பனியும் சுகம்
மனதிற்கினிய பாடல் சுகம்
மல்லிகையின் மணமும் சுகம்
மயக்கும் மாலை நிலவு சுகம்
தூறுகின்ற சாரல் சுகம்
தூவானவில்லின் வண்ணம் சுகம்
புலரும் காலைப் பொழுது சுகம்
காலை நேரத் தூக்கம் சுகம்
பூமி நனைத்த மலையின் வாசம்
பூக்கத் துடிக்கும் மொட்டும் சுகம்
அழும் குழந்தையை அணைக்க சுகம்
அணைக்கும் அன்னை மடியே சுகம் ....!!!!
No comments:
Post a Comment