Sunday 6 March 2011

vidhavai


விதவை ...

இறைவா உன் சித்து 
என் நெஞ்சிலே பித்து 
இருந்த ஒரு துணையை
இரக்கமின்றி ஏன் பிரிச்ச

என்ன தவறு செய்தேன் 
என் உயிரை நீ பறிச்ச 
உற்றார் உறவினரும் 
சுற்றமும் சூழ நின்னு

ஆறுதல் தான் சொன்னாலும் 
அவர் துணை போல ஆகிடுமா ?
"அமுதே" அச்சம் என்ன 
அருகினிலே நானிருப்பேன்

உன்னுடம்பைப் பாத்துக்கோன்னு 
உரம் கொடுத்த என் கணவா.....
உயிரான என்ன விட்டு - வேற 
உலகம் தேடிப்போனதென்ன .....!



No comments:

Post a Comment